web log free
April 25, 2024

விபத்துக்குள்ளான சொகுசு பஸ்ஸில் கேரள கஞ்சா

கொழும்பு, மருதானை பிரதேசத்தில் சொகுசு பஸ் ஒன்றில் இருந்து 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான 68 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மருதானை ரயில் நிலையத்தின் அருகாமையில் குறித்த பஸ் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது, குறித்த கேரளா கஞசா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.