web log free
December 15, 2025

விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலை பரீட்சார்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இம்மாதம் 25 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

அத்துடன், பரீட்சைகள் திணைக்கள இணையத்தளமாக www.donets.lk இலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd