web log free
September 03, 2025

மீண்டும் ஊரடங்கா? அரசாங்கம் விளக்கம்

இலங்கையில் திடீரென கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்துள்ள போதும் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே பலப்படுத்தப்படும் என்பதனால் பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் மூலம் சமூகத் தொற்று பரவ வாய்ப்பில்லை.

தேர்தலை இலக்காகக் கொண்டு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளை அரசாங்கம் தளர்த்தவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd