web log free
September 03, 2025

சிறுமிக்கு “இலக்கம்” திணித்தோர் சிக்கினர்

சிறுமியொருவருக்கு கையைப் பிடித்து தொலைபேசி இலக்கதினை கொடுத்த கைகலப்பில் ஈடுபட்ட ஐவரையும் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டார்.

சீனக்குடா, கப்பல்துறை, சர்தாபுர, பகுதிகளைச் சேர்ந்த 19, 21, 18 மற்றும் 20 வயதுடைய ஐவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் ஐவரும் இணைந்து கப்பல்துறை பகுதிக்கு சென்றுள்ளனர், அங்கே வீதியில் நின்ற பதினைந்து வயதுடைய சிறுமியொருக்கு தொலைபேசி இலக்கத்தினை எழுதி கையைப்பிடித்து பெற்றுக்கொள்ளுமாறு தினித்துள்ளனர்.

இச்சம்பவத்தினை நேரில் கண்ட ஊர்வாசியொருவர் கூக்குரலிட்டு அனைவரையும் ஒன்று சேர்த்து சிறுமி நின்ற இடத்திற்குச் சென்று சந்தேக நபர்களிடம் விபரத்தினை கேட்க சந்தேக நபர்கள் ஊர்வாசிகளை தாக்கி விட்டு ஐவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் காயங்களுக்குள்ளான நபர் ஒருவர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் ஐவரையும் பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் (வாசஸ்தலம்) முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd