web log free
April 06, 2026

கொழும்பில் ஈரான் போர்க்கப்பல்கள்

பயிற்சி மற்றும் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டு ஈரான் கடற்படையின் மூன்று கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

புஷ்ஷர், லாவன், பயன்டோர் ஆகிய பெயர்களைக் கொண்ட ஈரானிய கடற்படைக் கப்பல்கள் நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்தக் கப்பல்களுக்கு கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

நான்கு நாட்கள் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பல்கள், நாளை கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd