web log free
February 02, 2026

மின்தடையால் வாக்கெண்ணல் தடைபடாது

நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்றினால்பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, பாதுக்க, கிரிஎல்ல, மத்துகம, ஹோமாகம, அவிசாவளை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மின்சார த​டை ஏற்பட்டாலும் வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் எவ்விதமான சிக்கல்களும் ஏற்படாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd