web log free
September 17, 2025

மாரவில கோர விபத்து: சாரதி கைது


மாரவிலவில் கோர விபத்தொன்றை ஏற்படுத்தி, நால்வரை படுகொலைச் செய்து, மேலும் 19 பயணிகளுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், மாரவிலவில் நேற்று (18) இடம்பெற்ற இந்த கோர விபத்தில், நால்வர் பலியாகினர். அத்துடன், 19 பேர் காயமடைந்தனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ்ஸொன்று, வீதியை விட்டுவிலகி, பெரிய மின்மாற்றியில் மோதுண்டே விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 11 September 2019 01:38
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd