web log free
September 15, 2025

பின்வாங்கினார் சம்பந்தன்- மாவைக்கு கடிதம்

“தேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனால் இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள்” என தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றிரவு தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.

தேசியப்பட்டியல் குறித்து தமிழரசுக் கட்சிச் செயலாளர் துரைராஜசிங்கம் நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு உருவாகிய கடுமையான எதிர்ப்பையடுத்தே இந்த முடிவை சம்பந்தன் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.

அதற்கான பதில் கடிதத்தை சம்பந்தனுக்கு நேற்றிரவே மாவை சேனாதிராஜா, அனுப்பி வைத்துள்ளார். “தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேசி பொருத்தமான முடிவு எடுப்பேன்” என்று தனது பதிலில் மாவை தெரிவித்திருக்கிறார்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் புளொட், ரெலோ தலைவர்களுடன் மாவை சேனாதிராஜா இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd