web log free
July 02, 2025

4 கோடி ரூபாய் மோசடி ; சுங்க அதிகாரிகள் இருவருக்கு விடுமுறை


4 கோடி ரூபாய் சுங்க வரியை மோசடி செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுங்க திணைக்களத்தைச் சேர்ந்த இருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைக்கான சுங்க வரியை மோசடி செய்தனர் என்ற, சுங்க அதிகாரி மற்றும் சுங்க பரிசோதகர் ஆகிய இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேற்படி விவகாரம் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் லோஷனா அபேவிக்ரவின் முன்னிலையில், நேற்று (18) அறிக்கையிடப்பட்டதை அடுத்தே, அவ்விருவருக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:38
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd