web log free
May 10, 2025

கோழி இறைச்சியில் கொரோனா

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் ஷென்ஷென் நகரில் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கோழி இறைச்சியானது பிரேசில் நாட்டின் தென் மாகாணமான அரோரா அலிமென்டோசில் உள்ள ஆலையில் இருந்து வந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd