web log free
December 12, 2025

நாளை முதல் இயந்திரவாள் பதிவு

நாட்டின் பாவனையில் உள்ள சகல இயந்திரவாள்களையும் (Chainsaw Machines) பதிவுசெய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகி 28ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அரசாங்க அரசு சார்பு தனியார்துறை நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தப்படும் சகல இயந்திர வாள்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துசென்று அதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd