web log free
March 29, 2024

விபத்தில் தாய், குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் தாய் மற்றும் குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு - வெல்லவாய பிரதான வீதியின் தங்காலை சீனிமோதர பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி மற்றும் லொறி என்பன மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் தங்காலை வைத்தியசாலையில் அனிமதிக்கப்பட்டநிலையில், தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

லுணுகம்வெஹர பகுதியை சேர்ந்த 37 வயதுடைய தாயும் 3 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.