web log free
April 19, 2024

தெபானம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி


பன்னிப்பிட்டிய, தெபானம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கொழும்பு-13, கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபரொருவர் பலியாகியுள்ளார்.

இன்று அதிகாலை 12 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவ இடத்திலிருந்து வெற்றுத்தோட்டாக்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், நீதவான் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றனர்.