web log free
May 09, 2025

'5 வருடங்கள் தேவை'

ஜனநாயகத்தை உறுதிப்படுத்த மேலும் 5 வருடங்கள் தேவை என, திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னர் நாட்டில் எந்த ஒரு சட்டமும் ஜனநாயத்தை பாதுகாக்கும் வகையில் இருந்ததில்லை என்றும் நாட்டில் ஜனாதிபதியினால் எதனையும் செய்யமுடியும் என்ற ஒரு நிலை இருந்ததாகவும் நீதிமன்றங்கள் ஜனாதிபதியின் கீழேயே இயங்கி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது, அந்த நிலைமை மாற்றமடைந்து, ஜனநாயகம் எழுச்சி பெற்றுள்ள நிலையில் அதனை உறுதிபடுத்தி பாதுகாப்பதற்கு மேலும் 5 ஆண்டுகள் தேவைப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd