web log free
July 02, 2025

'ஜே.வி.பியால் மாத்திரமே முடியும்'

போதைபொருள் பயன்படுத்துவோர், போதைபொருள் வியாபாரிகள், குற்றங்களில் ஈடுபடுவோர் மற்றும் திருடர்கள் காணப்படும் இடமாக நாடாளுமன்றம் மாறியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழும்பும் சவாலுக்கு நாங்கள் தயார் எனும் தொனிப்பொருளின் கீழ், மக்கள் விடுதலை முன்னணியால் வெலிகம தொகுதி ஆதரவாளர்களுடனான கூட்டத்தின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டுக்கு தற்போது அரசியல் மாற்றம் தேவைப்படும் நிலையில் அதனை செய்வதற்கு மக்கள் விடுதலை முன்னியால் மாத்திரமே முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:43
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd