web log free
April 30, 2026

சஜித் வீட்டுக்கு விரைந்து சென்ற சி.ஐ.டி

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் விசாரணை நடத்த அவரது இல்லத்திற்கு தற்போது விரைந்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதற்கமைய மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது சஜித் பிரேமதாஸவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு விரைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd