web log free
March 29, 2024

மார்ச் 8 ஆம் திகதி 'பொறுத்தது போதும்'


ஒன்றிணைந்த எதிரணி ஏற்பாடு செய்துள்ள 'பொறுத்தது போதும்' முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம், எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 3 மணிக்கு, கண்டியில் நடத்தப்படவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.