web log free
December 05, 2025

மாயமான இலங்கை இளைஞர் சிக்கினார்

சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் தலைமறைவான ஜப்பான் நாட்டு சிறுமி மற்றும் இலங்கை இளைஞன் ஆகியோர் கொச்சிக்கடை பொலிஸாரால் நேற்று (25) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 ஜப்பானில் தொழிலதிபர் ஒருவரின் 15 வயதான மகளை கடத்திக் கொண்டு இலங்கைக்கு வந்து தலைமறைவாகியுள்ள இளைஞனை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

4 ஆண்டுகளுக்கு முன்பு மேலதிக கல்விக்காக ஜப்பானிற்கு சென்ற குறித்த இளைஞன், அங்குள்ள தொழிலதிபரின் வீட்டில் பகுதி நேரமாக வேலை செய்து வந்துள்ளார்.

இதன்போது மார்ச் 13ஆம் திகதி அவ்வீட்டில் 15 வயதான சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார்

இந்த நிலையில் சிறுமியின் தாய் 2020 மார்ச் 15 அன்று கொச்சிக்கடை பொலிஸ் நிலையம் மற்றும் ஜப்பானிய தூதரகத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார்.

ஜப்பானிய தூதரகம் தலையிட்டதையடுத்து சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு, கொச்சிக்கடையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

ஜப்பானிய சிறுமியின் பாதுகாப்பிற்காக, காதலனின் சகோதரியும் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

ஜப்பானில் இருந்து தனது காதலியின் தாய் இலங்கைக்கு வருவதை அறிந்த இளைஞர், தனது சகோதரியின் உதவியுடன் சுற்றுலா ஹோட்டலில் இருந்து காதலியுடன் மீண்டும் தலைமறைவானார்.

இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததை தொடர்ந்து, சந்தேகநபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

அத்துடன், கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபரின் தாய், சகோதரி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்த, குறித்த இருவரையும் பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd