web log free
April 23, 2024

ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு

அரசாங்க மற்றும் எதிரணியினர் சிறுபான்மை கட்சித் தலைவர்களை இன்று சந்தித்து பேசவுள்ளனர்.

இந்தச் சந்திப்பு இன்றிரவு 8.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இந்த விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது, அரசியலமைப்பு விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தீர்வு குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

இதில், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன்  கூறியுள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:42