web log free
December 05, 2025

பொறுமையாக ஆதரவளிக்குமாறு கோரிக்கை

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களுக்கு அருகில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பொறுமையாக ஆதரவளிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிபொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, முரண்பாடுகள் மற்றும் பதற்றமான நிலைமைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக கூறியுள்ளார்.

கொரோனா பரவல் நிலைமை குறித்து சுகாதார தரப்பினர் பரிசோதனைகளை மேற்கொண்டு அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், எனவே இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி பொறுமையாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd