web log free
September 10, 2025

கர்ப்பிணிப் பெண் திடீர் சாவு!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை சாரையடி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவரே உயிரிழந்தார். இன்று அவருக்கு ஏற்பட்ட திடீர் குருதிப் பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைத்ததும் பிரேத பரிசோதனை இடம்பெறும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd