web log free
December 05, 2025

பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள், உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.

குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம், யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு வலியுறுத்தினர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடயத்தை உயர் அதிகரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாகவும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

எனினும் பொலிஸாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள், தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd