web log free
December 05, 2025

இன்று அதிகாலை 5 மணி முதல் மீண்டும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கொழும்பு – 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3 வீதிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, புனித அன்ரூஸ் வீதி, புனித அன்ரூஸ் மேல் மற்றும் கீழ் வீதி ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd