web log free
February 01, 2026

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்:கருணாகரம் எம்.பி

தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற போதிலும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றில் இன்றைய தினம்(23) உரை நிகழ்த்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது பழிவாங்கலில் ஈடுபடும் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளில் கூட இடம்பெற்றமைக்கான வரலாறு இல்லை என குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd