web log free
December 06, 2025

சீன பாதுகாப்பு அமைச்சர் சென்ற கையோடு பிரதமரைச் சந்தித்தார் இந்திய தூதுவர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (29) அலரி மாளிகையில் சந்தித்ததுப் பேசினார்.

கோவிட்19 பெருந்தெற்று நோய் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கை தலைமைத்துவத்துக்கு இதன்போது தூதுவர் தெரிவித்தார் என இச்சந்திப்புக் குறித்து இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு எடுத்துச்செல்ல பிரதமரின் வழிகாட்டுதலையும் அவர் கோரினார் எனவும் இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் இலங்கை வந்த சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி, பிரதமரை நேற்று சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இன்று இந்திய உயர்ஸ்தானினர் பிரதமரைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd