web log free
February 01, 2026

முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், வெளி மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இராணுவத்தின் பொலிசார் மீன்பிடி அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd