web log free
February 01, 2026

இந்திய மீனவர்கள் அத்துமீறினால் கைது செய்யப்படுவார்கள்:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்று மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (01) தெரிவித்தார்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை மீறியும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்றால் அவர்கள் கைது செய்யப்படுவது மட்டுமன்றி அவர்களின் உடமைகளும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா தொற்றின் அச்சம் இருப்பதால் இருநாட்டு மீனவர்களும் ஆழ்க்கடலில் கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை எதிர்வரும் மே 18ஆம் திகதி உள்ள உள்நாட்டுப் போர் முடிவுற்ற தினத்தில் யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை தமிழர்கள் நினைவுகூர ஒருபோதும் அரசாங்கம் தடைவிதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd