web log free
March 27, 2026

மட்டக்களப்பு செங்கலடி செல்லம் திரையரங்கின் உரிமையாளர் கைது

மட்டக்களப்பு செங்கலடி செல்லம் திரையரங்க உரிமையாளரும், தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் கைது நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் கணினி குற்றப்பிரிவினரால் அவர், செங்கலடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூலின் பதிவுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.

2019 ஆண்டு முதல் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களின் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆராய்ந்ததில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சி சார்ந்தவையாக இருந்தமையால் அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக காவல்த்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd