web log free
September 11, 2025

இ.தெ.கா.வுக்கும் கூட்டமைப்புக்குமிடையே சந்திப்பு

மாகாணசபைத் தேர்தல் புதிய முறைமை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான  ஜீவன் தொண்டமான்  தெரிவித்துள்ளார்.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தாக அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொகுதிவாரியான தேர்தல் முறைமையில் தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு தமது மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd