இலங்கையில் இனி பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அதிகாரம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
புத்தளம் உட்பட பல பகுதிகளில் பைஸர் தடுப்பூசியை வழங்குவதில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளின் மூலம் பைஸர் தடுப்பூசி பெறுவதற்கு தகுதியற்ற நபர்களுக்கு அதனை வழங்கப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்..




