web log free
February 01, 2026

இலங்கையில் ஒரு வருடத்திற்கு குடும்பக்கட்டுப்பாடு

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஹர்ஷ அதபத்து இலங்கையில் வாழும் தம்பதியரிடம் இயலுமானால் கர்ப்பம் தரிப்பதனை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு தெரிவித்துள்ளார்.

அவர் இதனை கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மேலும், தற்போது, உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் காரணமாக கர்ப்பிணிப் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த கோரிக்கையை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Last modified on Thursday, 09 September 2021 06:04
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd