web log free
December 06, 2025

காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான அறிவித்தல்!

காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை, மேலும் 12 மாதங்களுக்கு நீடித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப் பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் அவை காலாவதியான திகதியில் இருந்து மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி எதிர்வரும் 2021 ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து 2022 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் காலாவதியாகவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd