web log free
September 08, 2025

9 பேர் விமான நிலையத்தில் கைது

இலங்கைக்கு தங்கம் கடத்தி வந்தக் குற்றச்சாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 5.2 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டிருப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா மற்றும் கடுகன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர் 3 இலங்கையர்களும் தமிழகத்தைச் சேர்ந்த 6 இந்தியர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd