web log free
April 19, 2024

சீரற்ற காலநிலையால் தடை ஏற்பட்ட கொழும்பு – கண்டி போக்குவரத்திற்கான மாற்றுவழிகள்

மண்சரிவு அபாயம் காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்றிரவு (10) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் அம்பேபுஸ்ஸ சந்தியில் திரும்பி குருணாகல், மாவத்தகம, கலகெதர, கட்டுகஸ்தொட்ட ஊடாக கண்டிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர மாவனெல்லை நகரின் எஸ் ஓ சந்தியின் வலதுபுறமாக திரும்பி ஹெம்மாத்தகம, அம்புலுவாவ, கம்பளை, பேராதனை ஊடாக கண்டிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களும் இந்த வீதிகளை பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.