web log free
May 12, 2025

மித்ரசக்தி கூட்டு இராணுவ பயிற்சி

இலங்கை மற்றும் இந்திய இராணுவம் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளன.

தியத்தலாவையில் உள்ள இராணுவ முகாமில் இன்றைய தினம் ஆரம்பிக்க உள்ள மித்ரசக்தி - 6 என்ற இந்த கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் 6ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டு இராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக 120 இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன்போது இரு நாடுகளின் இராணுவத்தினரும் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.

புனேயில் இடம்பெற்ற மித்ரசக்தி - 5 கூட்டு இராணுவ பயிற்சியில் இலங்கை மற்றும் இந்தியாவின் 120 இராணுவத்தினர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd