web log free
April 06, 2026

பெருந்தொகை பீடி இலைகள் சிக்கின


சிலாபம், உடப்பு கடல் பகுதியில் வைத்து 1232 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 35 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd