கடந்த வாரம் பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் கும்பலால் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை சந்தித்து கலந்துரையாடினார்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நம்பிக்கையையும் எடுத்துரைத்த அமைச்சர், மறைந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க பாகிஸ்தான் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதை நினைவுகூர்ந்த அமைச்சர், "அவர் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, விசாரணையின் அனைத்து தகவல்களையும் விரைவில் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்தார்" என்றார்.
இந்த விசாரணையை தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமரின் தலையீட்டையும் வெளியுறவு அமைச்சர் பாராட்டினார் மற்றும் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார். சியால்கோட்டில் உள்ள வர்த்தக சமூகம் 100,000 அமெரிக்க டொலர் நன்கொடை மற்றும் பிரியந்த குமாரவின் மாத சம்பளத்தை அவரது குடும்பத்திற்கு வழங்குவதாக அறிவித்ததையும் அவர் வரவேற்றார்.


