web log free
March 28, 2024

வந்தாறுமூலை விபத்து; மூவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிள்கள் மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

குறித்த விபத்து நேற்று இரவு 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்

இந்த விபத்தில் வேப்பவுஸ் வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 22 வயதுடைய மோகன் மயூரன், வேப்பவுஸ் 3 ம் குறுக்கு வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 23 வயதுடைய முருகுப்பிள்ளை பவித்திரன் ஆகியோர் உயிரிழந்ததுடன் தீப்பற்றி எரிந்தவர் அடையாளம் காணப்படவில்லை .

வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி இரவு 7.30 மணிக்கு 4 பேர் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

அத்துடன், அதற்கு பின்னால் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்களில் மோதி அவையும் விபத்துக்கு முகங்கொடுத்துள்ளன.

விபத்தில், இரண்டு மோட்டர் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததில் அதில் ஒருவர் தீக்கிரையானதுடன், ஏனைய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:50