web log free
September 07, 2025

கொழும்பின் பல பகுதிகளில் நீர் துண்டிப்பு

இன்று முற்பகல் 9 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்சார தடை மற்றும் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டே, கடுவலை மாநகர சபை மற்றும் அதன் நிர்வாக எல்லை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை மற்றும் அதன் நிர்வாக எல்லை ஆகிய பகுதிகளில் இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை மற்றும் அதன் நிர்வாக எல்லை பகுதி ரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd