web log free
June 01, 2025

மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம் மற்றும் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுகளுக்கு புதிய நீதிமன்றம்

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதியை நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று திறந்து வைத்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் அயராத முயற்சியின் பலனாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டம் கிராமப்புற மற்றும் கடினமான நிலப்பரப்பைக் கொண்ட கிராமமாக இருப்பதால்
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வெகுதொலைவில் இருந்து மக்கள் வருகை தந்த போது ஆட்கள் வரவழைக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வழக்குகள் போன்ற பல்வேறு பாதிப்புகள் காரணமாக, ஆரம்பத்தில் துணுக்காய் பிரதேசத்தில் அமைந்திருந்த இந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகள் காலப்போக்கில் மாங்குளத்தில் நிரந்தரக் கட்டிடம் நிர்மாணிக்க வழிவகுத்தது.

குறிப்பாக மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம், நாட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வரும் வழக்குகள் புதன்கிழமைகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் நலன் கருதி மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்தை முல்லைத்தீவு மாவட்ட நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வு நேற்று (27) பிற்பகல் 3 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆர்.சரவணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நீதியமைச்சர் அலி சப்ரி, நீதியமைச்சின் செயலாளர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைத்தீவு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வாரத்தில் 5 நாட்கள் நீதிமன்றத்தை நடத்த தனி நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
Last modified on Friday, 28 January 2022 08:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd