web log free
May 10, 2025

இரசாயன பயன்பாடு ஆய்வு நிறைவு

காய்கறி, பழவகை மற்றும் தேங்காய் எண்ணெயில் அடங்கியுள்ள கூறுகள் மற்றும் இரசாயனப் பயன்பாடு தொடர்பில் மேற்கொள்ளபட்ட ஆய்வு நிறைவடைந்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இது தொடர்பாக தகவல்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

பொதுமக்கள், உணவு வகைகளைப் பயன்படுத்தும் பொழுது பொருத்தமான மற்றும் பொருத்தமற்றவை தொடர்பில் பரிசோதிக்க வேண்டும் என்று, உணவு பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் லக்ஷமன் கம்லத் தெரிவித்துள்ளார்.

நச்சுத் தன்மையற்ற உணவு பொருட்களை வழங்கும் நோக்கில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்மூலம் கிடைக்கபெறும் பெறுபேறுகள் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள், பொதுமக்களைத் தெளிவுப்படுத்தும் வகையில் செயற்பாடுகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும் என்றும், அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd