web log free
September 17, 2025

எமில் ரஞ்சனுக்கு பிணை

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், அவரை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd