web log free
February 02, 2026

வத்திக்கானுடன் இணைந்து கர்தினால் தீட்டும் திட்டம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையும் வத்திக்கானும் ஆராய்ந்து வருவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

வத்திக்கானுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் ஆனால் தற்போதைக்கு அது குறித்து எதனையும் தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக கத்தோலிக்க திருச்சபை சர்வதேச உதவியை நாடுவதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக செஹான் சானக கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்தினால் அது கிட்டத்தட்ட ஒரு கடத்தல் என தெரிவித்துள்ளார்.

கைது செய்வதற்கு என நாகரீகமான வழிமுறைகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd