web log free
September 01, 2025

டொலர் பிரச்சினையினால், மரபணு சோதனைக்கு பாதிப்பு !

மரபணு சோதனை அறிக்கைகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு போதியளவு இரசாயனங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

மரபணு பரிசோதனைகளை நடாத்துவதற்காக மாதாந்தம் சுமார் 200 அறிக்கைகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயன வகைகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படுபவை எனவும் இவற்றை பெற்றுக்கொள்ள அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இரசாயன வகைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள கால தாமத நிலையினால் வழக்கு விசாரணை அறிக்கைகளை வெளியிட முடியாதுள்ளது என அரசாங்க இரசாயன பகுப்பாய்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd