web log free
December 08, 2025

நாடு இருளில் இருக்கப்போகும் கால நேரம் இதோ

 

இன்று (18) முதல் நாளொன்றுக்கு இரண்டு முறை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்வெட்டு இருக்காது என அறிவித்த ஆணைக்குழுவின் தலைவர் தானே அறிவித்து சில மணித்தியாலங்களில் இவ்வாறு தெரிவித்தார்.

மின்வெட்டு இரண்டு கட்டங்களாக இருக்கும். முதல் கட்டம் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும்.

அப்போது ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்படும்.

இரண்டாம் கட்டம் மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறும்.

அக்காலப்பகுதியில் 45 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின்வெட்டு அமுலில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd