web log free
September 19, 2024

இன்று 2 தொடக்கம் 3 மணித்தியாலங்கள் மின்சார தடை !

நாட்டில் இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இல்லாமை காரணமாகவே, மின்சாரம் துண்டிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி, 2 தொடக்கம் 3 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரையான காலப் பகுதிக்குள் இந்த மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.