web log free
September 19, 2024

ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை முழுவதும் பாராளுமன்றில்

 

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

88 இணைப்புகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.

சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியப் பதிவுகள் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் அறிக்கை இன்று நாடாளுமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பெறுபேறுகள் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக இது கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.