web log free
September 19, 2024

டொலர் பற்றாக்குறையால் மனிதர்களுக்கு மாத்திரமல்ல சடலங்களுக்கும் பிரச்சினை!

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியால் எதிர்காலத்தில் நாடு முழுவதும் போர்மலின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மலர்சாலை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது போதுமான அளவு போர்மலின் மட்டுமே இருப்பதாகவும், இதனால் மலர்சாலை தொழில் எதிர்காலத்தில் சிக்கலுக்கு உள்ளாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போர்மலின் இறக்குமதி செய்யப்படுகிறது. எரிபொருட்களுக்கு ​டொலர் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் போர்மலின் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர்.

உடல்களை எம்பாமிங் செய்வதற்கு மாற்று வழி இல்லை என்பதால் ஒரு மாதத்திற்குள் போர்மலின் இறக்குமதி செய்ய முடியாவிட்டால், உடலை எம்பாமிங் செய்யாமல் 24 மணி நேரத்தில் இறுதிச் சடங்கை முடிப்பதைத் தவிர உடலைப் பாதுகாக்க வழியில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.