web log free
February 03, 2026

பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

பண்டிகை காலத்தில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

தற்போது வரையில் நாளாந்தம் சுமார் 1,200 கொரோனா நோயாளர்களின் பதிவாகி வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, வௌிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தில் நாளை(01) முதல் புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd