web log free
September 19, 2024

என்னது தொடர்ந்து 12 மணிநேர மின்வெட்டா..!

இன்னும் சில நாட்களில் 12 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால் முறையான திட்டமொன்று மேற்கொள்ளாமையே மின்வெட்டுக்குக் காரணம் எனவும் இதனால் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பணமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் செல்லாததற்கு ஒரு காரணம் நாட்டின் அரசாங்க செலவீனத்தில் அறுபத்து நான்கு வீதம் ராஜபக்ச அமைச்சுக்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டமையே எனவும் அவர் கூறினார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்ப்பினால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான நிறுவனங்களுக்கு செல்லாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.